'புலியை போல் பதுங்கி நாம் காத்திருக்க வேண்டும்'

73பார்த்தது
வலங்கைமானில் தேமுதிகவின் 20ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாம் புலி பதுங்குவதைப் போல் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். நமக்கான நேரம் வரும்போது பாய்ந்து நம் வெற்றியை பறிக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து ஒவ்வொரு இடத்திற்கும் என் அப்பா கையைப் பிடித்து என்னை அழைத்துச் சென்றார். அது போல தான் இன்றும் உங்களிடம் என்னை விட்டுச் சென்றுள்ளார். வரக்கூடிய காலம் தேமுதிகவின் ஆட்சிக்காலமாக அமைய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி