பருவமழை முன் எச்சரிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம்

50பார்த்தது
பருவமழை முன் எச்சரிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம்
பாபநாசம் வட்ட அலுவலகத்தில்  வட்டாட்சியர்  தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பருவமழையினால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளையும் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, காவல் துறை,   தீயணைப்புத்துறை,   மின்சார துறை,   மற்றும். தொடர்புடைய இதர அரசுத்துறை  அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் பாபநாசம் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள்,   மற்றும் அனைத்து சரக வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி