மெலட்டூர் சரக கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

74பார்த்தது
மெலட்டூர் சரக கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் மெலட்டூர் சரக கிராமங்களுக்கு ஜமாபந்தி தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுதாராணி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 150 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்க ஜமாபந்தி அலுவலர் அறிவுறுத்தினார். பின்னர் நான்கு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், குடும்ப அட்டையில் திருத்தம் செய்தல், சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி, சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் முருககுமார், வட்ட சரக ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கணேஷ் குமார், முதல் நிலை வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன்,  
பவுல் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி