தென்காசி மாவட்டம் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் ஆராய்ச்சிபட்டியில் நடைபெற்ற திமுக பிரமுகர் நிகழ்ச்சியில் மதுரை ஆதீனத்தை சந்தித்து பேசி பொன்னாடை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.