பாலியல் வன்முறைகள் பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர வேண்டும்

82பார்த்தது
பாலியல் வன்முறைகள் பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர வேண்டும்
பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க தமிழக அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்த பரிந்துரையில் ஆசியர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ”பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். சமூகப் பிரச்சினைகள், சாதிய பாகுபாடு, பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் தடுப்பு ஆகியவை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர வேண்டும், பி.எட் படிப்பிற்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி