எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு

52பார்த்தது
எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்த நிலையில், உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் 17ம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி