சூரியன், செவ்வாய் மற்றும் புதன் இணையப் போகிறார்கள்..!

1083பார்த்தது
சூரியன், செவ்வாய் மற்றும் புதன் இணையப் போகிறார்கள்..!
சூரியன், செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு யோகம் ஏற்படும். சூரியன் மகர ராசியில் உள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் சூரியனும் செவ்வாயும் ஆதித்ய மங்கள ராஜயோகத்தை உருவாக்கும். அதன்பின் பிப்ரவரி 7ஆம் தேதி புதனும் மகர ராசிக்குள் நுழைகிறார். சூரியனும் புதனும் இணைவதால் புத்தாதித்ய ராஜயோகமும் உருவாகும். இதனால், மேஷம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் புதிய சாதனைகள் ஏற்படும். எதிரிகளை தோற்கடித்து முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தொடர்புடைய செய்தி