திடீரென ஏற்பட்ட தீ விபத்து - 12 கடைகள் எரிந்து நாசம்

67பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜவுளி சந்தையில் இன்று (மே 22) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்என் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள 12 கடைகள் ஒவ்வொன்றாக எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி