ஹரியானாவில் இன்று (மே 22) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்த அமைப்பு எப்படி
வேலை செய்கிறது? யாருக்கு சாதகமாக இருக்கிறது? அது யாரை பாதுகாக்கிறது? யாரை தாக்குகிறது என்பது எல்லாம் எனக்குத் தெரியும். என் பாட்டி, என் தந்தை பிரதமராக இருந்துள்ளனர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்துள்ளார். இவர்களுடன் நான்
பிரதமர் அலுவலகம் சென்றுள்ளேன். இதனால்
பிரதமர் அலுவலகம் எப்படி இயங்கும் என்பது எனக்கு தெரியும். என்னிடம் இருந்து இந்த அமைப்பை மறைக்க முடியாது” என்றார்.