கார் விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவன் - 4 பேர் காயம்

61பார்த்தது
கார் விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவன் - 4 பேர் காயம்
புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் ஏற்படுத்திய கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள் அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று (மே 22) பிரபல மருத்துவரின் மகனான 15 வயது சிறுவன், கார் ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.