உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் 7 வயது சிறுவனை இன்று (மே 22) நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் சித்தி மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுவனை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிறுவனை கொலை செய்த சித்தி மற்றும் மந்திரவாதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.