உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தண்டா பனேடாவில் ஒரு தெருவைச் சேர்ந்த எருமை மாடு மற்றொரு தரப்பினரின் தெருவில் புகுந்துள்ளது. இதனால், முஸ்லிம் சைனி சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஹரித்வார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் கோட்வாலி மங்களூர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.