சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்!

82பார்த்தது
சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்!
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயமாகி உள்ளனர். தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த 20 போலீசாரில் 13 பேர், உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறினர். மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, 7 பேரும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என சக போலீசார் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி