ஒன்றரை ஆண்டுகளாக இளம்பெண் மிரட்டி பலாத்காரம்

50பார்த்தது
ஒன்றரை ஆண்டுகளாக இளம்பெண் மிரட்டி பலாத்காரம்
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை ஆண்டுகளாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், இவரது தொல்லையால் ஒன்றரை வருடத்தில் மூன்று வீடுகள் மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.