17 வயது மாணவனுடன் லாட்ஜில் ரூம்.. 40 வயது டீச்சர் கைது

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் கடந்த 15 ஆம் தேதி காணவில்லை என மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவருக்கும், 40 வயது ஆசிரியைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆசிரியை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி