இந்திய பிரதமர் மோடி, தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்று, பல முக்கிய முடிவுகளை எடுத்து, அதன் பின்னர் தனது அடுத்த அரசியல் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக நேரில் பங்கேற்று மிகுந்த மரியாதையுடன் மோடியை வரவேற்றார்.