சிவகாசி வெடிவிபத்து- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

83பார்த்தது
சிவகாசி வெடிவிபத்து- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சிவகாசி அடுத்த காளையார் குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். சிவகாசி பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி