இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி

58பார்த்தது
இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி பகுதி அச்சரம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் ஜெகன் (35). இவர் கடைக்குச் சென்று விட்டு பைக்கில் வரும் போது பில்லமங்கலத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வைத்தியநாதன் (34) என்பவர் பைக்கில் கீழச்சிவல்பட்டியிலிருந்து இளையாத்தங்குடி செல்லும் போது எதிர்பாரதவிதமாக ஜெகன் பைக் மீது மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெகன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கீழச்சிவல்பட்டி போலீசார் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த வைத்தியநாதன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலைய காவல் சார்பாய்வாளர் சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி