வைக்கோல் லாரியில் தீ விபத்து.. உயிர் தப்பிய ஓட்டுநர்

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மாந்தை அருகே வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. அப்போது மின்கம்பியில் வைக்கோல் பட்டதால் தீ பற்றி எரியத் தொடங்கியது. லாரி முழுவதும் தீ பரவிய நிலையில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், நடுரோட்டில் எரிந்துகொண்டிருந்த லாரியை பல மணி நேரம் போராடி அணைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி