கோயில் திருவிழாவினை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு.

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம், சூராணம் அருகே வண்டலில் அய்யனார் கோயில் திருவிழாவினை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 118 வீரர்களும் பங்கேற்றனர். வட்டமான அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கை கால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 8 மாடுகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் செயல்பட்டு அதனை அடக்கி பார்வையாளர்களின் கைதட்டளை பெற்றனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண வண்டல், சாலைகிராமம், இளையாங்குடி, சூராணம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மஞ்சுவிரட்டு ஆர்வளர்கள் போட்டியினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி