குழந்தை பாக்கியம் கிடைக்க திருவிளக்கு பூஜை

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூசலாகுடி ஊராட்சி கொத்தங்குடி கிராமத்தில் உள்ள இடையன் காளியம்மன் கோவில் உள்ளது. குழந்தை வரம் தந்தருளும் கோவிலாக விளங்குவதால் இப்பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும் இந்த ஆண்டிற்கான திருவிளக்கு பூஜை இன்று காலை 8 மணி அளவில் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அருள்வாக்கு சொல்லப்பட்டு 10 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் பெண்கள் தங்கள் வீட்டு சுப காரியங்கள் தங்கு தடை இன்றி நடக்கவும், குழந்தை வரம், திருமணம் ஆகாத பெண்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் கலந்து கொண்டனர். இந்த
திருவிளக்கு பூஜையில் இந்த ஓட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மனமுருக அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி