அதிர்ச்சி! அடித்து கொல்லப்பட்ட 8 வயது சிறுவன்

1887பார்த்தது
அதிர்ச்சி! அடித்து கொல்லப்பட்ட 8 வயது சிறுவன்
திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா என்ற கிராமத்தை சேர்ந்த சுரேஷ் சிந்துமதி தம்பதியின் 8வயது மகன் அனிஷ் கடந்த 16ஆம் தேதி காணாமல் போயுள்ளார். மகனை கண்டுபிடித்து தர சொல்லி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, சிறுவனை அதே தெருவை சேர்ந்த ரேகா என்பவர் தனது ஆண் நண்பருடன் அழைத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. ரேகாவை பிடித்து விசாரித்ததில், சிறுவனை அடித்து கொலை செய்து மூட்டையில் கட்டி ஆந்திர மாநிலம் வார்தையப்பாலயம் பகுதியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி