பாலியல் தொல்லை: அமமுக பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை

66பார்த்தது
பாலியல் தொல்லை: அமமுக பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அமமுக பிரமுகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு தாளாளர் ஜோதி முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.75,000 அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.