பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7-ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷண் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கிற்கு எதிராக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரிஜ் பூஷண் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.