ஏர் யூரோபா போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் 325 பயணிகளுடன் ஸ்பெயினின் மாட்ரிட்டில் இருந்து உருகுவேயின் தலைநகரான மான்டிவீடியோவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டது. ஆனால் வழியின் நடுவே விமானத்தில் நடுக்கம் ஏற்பட்டது. பலத்த குலுக்கல் காரணமாக பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். அதே நேரத்தில் ஒரு பயணி மேல்நிலைப் பெட்டியில் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்தில் சுமார் 30 பேர் காயமடைந்தாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.