ஏலத்தில் ரூ.37.12 லட்சத்துக்கு எள் விற்பனை

57பார்த்தது
ஏலத்தில் ரூ.37.12 லட்சத்துக்கு எள் விற்பனை
ஈரோடு மாவட்டம் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 6) ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 30 டன் எள், 961 கிலோ தேங்காய், 20 மூட்டை தேங்காய் பருப்பு ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஏலத்தில் ரூ.37.12 லட்சத்துக்கு எள் விற்பனையானது. ரூ.52 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்புகளும், ரூ.10 ஆயிரத்திற்கு தேங்காய்களும் விற்பனையாகின. எள் வகைகளில் கருப்பு ரகம் அதிகபட்சமாக கிலோ ரூ.145.69 வரை விற்பனையானது.

தொடர்புடைய செய்தி