'யாகி' புயல் வியட்நாமை உலுக்கி வருகிறது. இந்த பேரிடர் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதோடு, நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். வடக்கு வியட்நாமில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமாக உள்ளது. 149 கிமீ வேகத்தில் காற்று வீசுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.