நடிகையை மடியில் உட்கார சொன்ன இயக்குநர்

80பார்த்தது
நடிகையை மடியில் உட்கார சொன்ன இயக்குநர்
சென்னையில் ஒரு படத்திற்கு ஆடிஷன் சென்றபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை நடிகை ஸ்ரேயா குப்தோ பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "2014-ல், நான் ஒரு இயக்குநர் அலுவலகத்திற்கு ஆடிஷனுக்காக என் அம்மாவுடன் சென்றிருந்தேன். நான் கேபினுக்குள் நுழைந்ததும், இயக்குநர் என்னிடம், 'என் மடியில் உட்காரு' என்றார். அப்போது என்ன பண்ணுவதென்றே எனக்கு தெரியவில்லை. உடனே நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி