வாட்ஸ் ஆப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை

55பார்த்தது
வாட்ஸ் ஆப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை
கன்னியாகுமரி குளச்சல் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று (மே 22) மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த அபிஷ் என்ற இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வாட்ஸ் ஆப் கஞ்சா வியாபாரி என்பது உறுதியானது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி