தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர் தேவேந்திரன் என்பவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சப் பெற்று வருகிறார். கபடி விளையாட்டு மோதலில் கொலை முயற்சி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயதான 3 சிறார்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.