சர்ஃப்ராஸ் சதம், பண்ட் அரைசதம்... இந்தியா நிலையான ஆட்டம்

53பார்த்தது
சர்ஃப்ராஸ் சதம், பண்ட் அரைசதம்... இந்தியா நிலையான ஆட்டம்
பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்தியா 46 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, நியூசி.அணி 402 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் 52, கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தனர். இன்று தொடங்கிய 4-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃராஸ் கான் 125, ரிஷப் பண்ட் 53 ரன்களுடன் ஆடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி