“தமிழ்நாடு - கேரளா இடையே மொழி பிரச்னை இல்லை” - காங். பதில்

61பார்த்தது
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பணிக்குச் செல்லும் தமிழக இளைஞர்கள், மொழி தெரியாமல் சிரமப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்தார். இந்நிலையில், “வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. தமிழ்நாட்டு மக்கள் கேரளா வரும்போது எங்களுடன் தொடர்பு கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. நாங்களும், தமிழ்நாடு சென்றால் எந்த பிரச்னையும் இல்லை” என கேரள காங். பதில் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி