சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை!

55பார்த்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்குமேல் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பெய்தது

சேலம் மாநகர பகுதிகளான அஸ்தம்பட்டி , ஏற்காடு அடிவாரம், ஐந்து ரோடு, புதிய பேருந்துநிலையம், அம்மாப்பேட்டை, குகை உள்ளிட்ட பகுதிகளிலும்.

அதேபோல் புறநகர் பகுதியான ஓமலூர், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது. மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி