கல்லூரி பேராசிரியர் வீட்டில் டூ வீலர் திருடிய 2 பேர் கைது

59பார்த்தது
கல்லூரி பேராசிரியர் வீட்டில் டூ வீலர் திருடிய 2 பேர் கைது
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). இவர் சங்ககிரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மணிவண்ணன் கடந்த 2-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க ெசன்றார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இது குறித்து மணிவண்ணன் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த குணா என்ற சுரேஷ்குமார் (30), குமார் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிவண்ணனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி