கூட்டுறவு சங்கத்தில் சிலிண்டர் வெடித்ததில் 2பேர் காயம்

58பார்த்தது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி பகுதி மேட்டுத்தெருவில் பால் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் உள்ள பால்கேன்களை பழுது பார்க்க ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த குமார் (வயது42), கோபி (36) ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் கேனை பழுது பார்க்க கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்தனர். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் குமார், கோபி ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி