ஓமலூரில் வாராஹி ஆஷாட நவராத்திரி விடையாற்றி உற்சவம்!

54பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூரில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.!. திரளான பக்தர்கள் கலந்து அம்மனை வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் அமந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத சுயம்புநாதர் திருக்கோவிலில் எழுந்தருளிய வரம்தரும் வாராஹி அம்மனுக்கு கடந்த ஜூலை 6-ம் தேதியன்று ஆஷாட நவராத்திரி விழா தொடங்கி 9-நாட்கள் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான 10-ம் நாள் நேற்று அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற்று, ஆஷாட நவராத்திரி விழா நிறைவடைந்தது.

இதில் ஓமலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி