ஓமலூர் பேருந்து நிலையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

72பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலைய பகுதியில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் ஓமலூர் பேருந்து நிலையத்தின் எதிரில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்கு தினந்தோறும் ஏராளமான பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம் இந்த நிலையில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள கடைகளுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களை பேருந்து நிறுத்தத்திலேயே நிறுத்திவிட்டு செல்வதால் பேருந்து உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்லாமல் சாலையின் மையப்பகுதியில் நின்று ஏற்றி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து ஓமலூர் காவல் துறையினர் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தொடர்புடைய செய்தி