ஓமலூர்; வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி 9ம் நாள் சிறப்பு பூஜை

80பார்த்தது
சேலம், ஓமலூர் நகரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத சுயம்புநாதர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள வரம்தரும் வாராஹி அம்மனுக்கு கடந்த ஜூலை 6-ம் தேதியன்று ஆஷாட நவராத்திரி விழா தொடங்கி பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 9-ம் நாள் இரவு 8 மணிக்கு பல்வேறு வசானை திரவியங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், வண்ண மலர்களால் அலங்கரித்து மஹா வேள்வி நடைபெற்று, மஹா தீபராதனை காண்பிக்கபட்டது.

இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆஷாட நவராத்திரி விழா நிறைவாக இன்று (ஜூலை-15) திங்கட்கிழமை மாலை 6 மனிக்குமேல் அம்மனுக்கு பல்வேறு கனிகளை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மா, பலா, வாழை, ஆப்பிள் போன்ற பல்வேறு பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம், மஹா ஹோமம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி