ஓமலூர்;பல்வேறு பகுதிகளில் இரவு வெளுத்து வாங்கிய கனமழை!

57பார்த்தது
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஆனால் ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான துறால் மட்டுமே விழுந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்பொழுது தீடிரென ஓமலூர் நகர் மற்றும் பெரியார் பல்கலைகழகம், புளியம்பட்டி, தாரமங்கலம் பிரிவு ரோடு, காமலாபுரம் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை வெளுத்து வருகிறது. இந்த திடீர் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த கனமழையால் ஓமலூர் சுற்றுவட்டார பகுதகளில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி