தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவில் கராத்தே போட்டியில் எடப்பாடியை சார்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர். நேற்று அவர்களுக்கு எடப்பாடியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் எடப்பாடி அதிமுக நகர கழக செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.