தலைவாசல் தெற்கு ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

73பார்த்தது
தலைவாசல் தெற்கு ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
சேலம் மாவட்டம் தலைவாசல் தெற்கு ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம் இலுப்பநத்தத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அழகர் கோவில் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி வரவேற்று பேசினார். முன்னாள் எம். எல். ஏ. சின்னதுரை, மாணிக்கம், பெரியசாமி, வீரகனூர் பேரூராட்சி தலைவர் கமலா சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தி. மு. க. முப்பெரும் விழாவிற்கு கட்சியினா் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தி. மு. க. ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் முத்துசாமி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி