தலைவாசல் வடக்கு ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

65பார்த்தது
தலைவாசல் வடக்கு ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
சேலம் மாவட்டம் தலைவாசல் வடக்கு ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தேவியாக்குறிச்சி திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். முன்னாள் எம். எல். ஏ. சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தி. மு. க. முப்பெரும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி