சாக்கடை அடைப்பால் துர்நாற்றம் பொது மக்கள் அவதி!

66பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் பெரியார் சிலையருகே சாக்கடை கால்வாய் செல்கிறது.
இந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிய உள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுவதால். உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாக்கடையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி