இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சைதாப்பேட்டை உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி, இறையருள் எனது குடும்பத்திற்கு இருப்பதால் தான் எனது மகனின் உடல் எனக்கு கிடைத்தது. ஒருவேளை எனது மகனின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை சோகத்தின் விளம்புக்கே சென்றிருக்கும். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும் என உருக்கமாக தெரிவித்தார்.