28ஆம் தேதி மாசித் தேரோட்டம்

66பார்த்தது
28ஆம் தேதி மாசித் தேரோட்டம்
தூத்துக்குடி: நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 24ஆம் தேதி கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் திரு வீதி உலா நடைபெறும். வருகிற 28ஆம் தேதி சிகர நிகழ்வான 9ஆம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும். மறுநாள் இரவில் சுவாமி பொலிந்துநின்ற பிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 1ஆம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சார்யர்களுடன் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி