லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தற்போது அந்தப் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அப்படத்தில் கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் இயக்கும் முதல் படத்திலேயே துல்கர் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.