கனரா வங்கியின் சமூக வலைதள பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள்

65பார்த்தது
கனரா வங்கியின் சமூக வலைதள பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள்
நாட்டின் பொதுத்துறை வங்கியாக இருக்கும் கனரா வங்கியின் ட்விட்டர் பக்கத்தை சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் பக்கத்திற்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், பெயரை மாற்றி இருக்கின்றனர். இது தொடர்பாக கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதள பக்கத்திற்குள் ஹேக்கர்கள் ஊடுருவி இருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பக்கத்தை மீட்க எக்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறோம், பிரச்சனை சரி செய்யப்பட்டதும் அறிவிப்பு வெளியாகும்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி