உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு!

57பார்த்தது
உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு!
ஜாமீன் நிறுத்திவைக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி