இடித்து தூக்கிய கார்.. பெண் பரிதாப பலி (சிசிடிவி)

70பார்த்தது
மும்பையின் கண்டிவாலி பகுதியில் கடந்த ஜூன் 21ஆம் தேதி சுரேந்திர குப்தா என்ற இளைஞர் சாலையில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது, ஒரு இடத்தில் மெதுவாக சென்ற அவர் பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார். இதனால், காரின் முன்னாள் சென்ற ஒரு பெண் உள்பட மூன்று பேர் மீது கார் கொடூரமாக மோதியது. இதில், காரின் அடியில் விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி