ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்கள் கொள்ளை (சிசிடிவி)

78பார்த்தது
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்கு விற்பனைக்காக லாரி மூலம் மதுபானங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர், லாரியில் இருந்த மதுபானங்களை ஊழியர்கள் கடைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள், ஊழியரை மிரட்டி அவரிடம் இருந்த மதுபானப் பெட்டிகளை பிடுங்கி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. அதன் பேரில், டாஸ்மாக் ஊழியர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அந்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி